/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது
ADDED : மார் 02, 2025 07:02 AM
அரூர்: கடத்துாரில், மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, த.வெ.க., நகர பொறுப்பாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுதாகர், 45. இவர், த.வெ.க.,வில் கடத்துார் நகர பொறுப்பாள-ராக பதவி வகித்து வருகிறார். இவரது உறவினரான, 16 வயது-டைய மாணவி இங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.கடந்த, 23 அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டி-ருந்த மாணவியை, சுதாகர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால், சுதாகர் அங்-கிருந்து தப்பியுள்ளார்.
இது குறித்து மாணவியின் புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று சுதாகரை போக்சோ சட்-டத்தில் கைது செய்தனர்.