நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, 5:20 மணி முதல், விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று பெய்த சாரல்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.