ADDED : ஏப் 09, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண் கடத்திய லாரி பறிமுதல்
அரூர்:அரூர் நான்குரோட்டில், நேற்று காலை, 10:00 மணிக்கு, தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் இளையசெல்வி மற்றும் வருவாய் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியில், 4 யூனிட் கிராவல் மண் இருந்தது. இது குறித்து லாரியின் ஓட்டுனரிடம் விசாரித்த போது, அவர் பட்டவர்த்தியை சேர்ந்த பிரகாஷ் என்பதும், உரிய அனுமதியின்றி ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுனர் மற்றும் லாரியை கிராவல் மண்ணுடன் கைப்பற்றி, உதவி இயக்குனர் அரூர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து ஒப்படைத்தார். போலீசார், வழக்குப்
பதிந்து விசாரித்து வருகின்றனர்.----