ADDED : நவ 20, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில், மாவட்ட, காங்., சார்பில், முன்னாள் பிரதமர் இந்திராவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னாள் மாவட்ட, காங்., கட்சி தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட பொருளாளர் உமர் ஆகியோர், இந்திராவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில், இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர்., நடவடிகைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. காங்., முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர் ஜேக்கப், நகர தலைவர் யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

