நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணி முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது.
இரவு, 7:00 மணிக்கு மேலாகியும் மழை தொடர்ந்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று பெய்த சாரல்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.