/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் தலைமறைவு
/
சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் தலைமறைவு
ADDED : ஆக 21, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, காரிமங்கலத்தை சேர்ந்தவர் சிவசக்தி, 23. இவர், 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி காதலித்துள்ளார். இதை சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த மார்ச் மாதம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, உறவினர் இல்லத்தில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது அச்சிறுமி, 4 மாத கர்ப்பமாக உள்ளார். தகவலறிந்த ஊராட்சி நல அலுவலர் சாந்தி, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, சிவசக்தியை தேடி வருகிறார்.

