நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி ஆத்துமேடு பகுதியில், புஷ்பா என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத நிலையில், 35 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் நேற்று மதியம் 12:00 மணிக்கு மிதந்தது.
இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த புகார்படி, வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள், மக்கள் உதவியோடு சடலத்தை கயிறு மூலம் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார், எப்படி உயிரிழந்தார் என விசாரிக்கின்றனர்.

