ADDED : நவ 20, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, எழும்பி பிரகாசி மிஷினரி பேராயம் மற்றும் கேப்பேபிள் பவுன்டேஷன், கல்வாரி பவுன்டேஷன் அறக்கட்டளை சார்பில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. கலெக்டர்
தினேஷ்குமார் ஏழை மக்களுக்கு, புத்தாடை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்வில், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை எழும்பி பிரகாசி மிஷினரி பேராயத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் டேனியல் சக்கரவர்த்தி மற்றும் மாநில துணை செயலாளர் ஜேசுதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

