ADDED : செப் 03, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாதனுாரில், அம்பேத்கரின் உருவ வெண்கலச்சிலை அமைக்க ஊர்மக்கள், தமிழ்நாடு சட்டசபை பேரவை குழுவினரிடம் மனு அளித்தனர்.
அதன் தொடர் நடவ-டிக்கையாக நேற்று மாலை தாதனுாரில், அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், டி.எஸ்.பி., ஜெகன்நாதன் மற்றும் வருவாய்த்-துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிலை அமைக்-கப்படுவதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுமா, அல்லது சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்-பட்டது.