/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி
/
சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி
சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி
சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி
ADDED : ஆக 08, 2024 06:26 AM
அரூர்: அரூரில், சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல், மின்நுகர்வோர் அவதிக்கு உள்ளாகினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் மின்வாரிய அலுவலகத்தில், மின் கட்டணம் செலுத்த ஒரு கவுன்டர் செயல்பட்டு வருகிறது. அரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், இங்குதான் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். நேற்று மதியம், 1:45 மணி முதல், சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின்நுகர்வோர் அவதிக்கு ஆளாகினர்.
கிராமங்களில் இருந்து வருபவர்கள் மீண்டும், மீண்டும் வந்து செல்வதால், தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக கூறியதுடன், சிலருக்கு நேற்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதால், மின் கட்டணம் செலுத்தாவிடில், இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக, கவலை தெரிவித்தனர்.