sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முகாமில் மக்களுக்கு அரசு திட்டங்கள் விளக்கம்

/

முகாமில் மக்களுக்கு அரசு திட்டங்கள் விளக்கம்

முகாமில் மக்களுக்கு அரசு திட்டங்கள் விளக்கம்

முகாமில் மக்களுக்கு அரசு திட்டங்கள் விளக்கம்


ADDED : ஆக 14, 2024 02:11 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சமுதாய கூடத்தில், 'மக்க-ளுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. பி.டி.ஓ., ஜெகதீசன் தலைமை வகித்தார்.

முகாமில், அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்கள், முதல்-வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், சமுகநலத்துறை மூலம் வழங்கப்படும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம் குறித்து விளக்கினர்.

மேலும், வேளாண் துறை மூலம் மானிய விலையில் விவசாயிக-ளுக்கு இடுபொருட்கள் வழங்குதல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இ-சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் என்பன உட்பட, தமிழக அரசு செயல்-படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்-கமளித்தனர். பல்வேறு துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.முகாமில், பஞ்சப்பள்ளி, கும்மனுார், சூடனுார், அத்திமுட்லு, கெண்டேனஹள்ளி ஆகிய பஞ்.,களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி, பஞ்., தலைவர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

* இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், பையர்நத்தம், போதக்காடு, மெணசி ஆகிய, மூன்று ஊராட்சிகளுக்கும், பையர்-நத்தம் சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ.,க்கள் ரவிச்-சந்திரன், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தா குப்பு-சாமி, பூங்கொடி மாணிக்கம், ரீனாஅன்பரசு ஆகியோர் பொதுமக்-களிடம் மனுக்களை பெற்றனர்.






      Dinamalar
      Follow us