/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'220 மாணவர்களுக்கு ரூ.14 கோடி கல்விக்கடன்'
/
'220 மாணவர்களுக்கு ரூ.14 கோடி கல்விக்கடன்'
ADDED : ஆக 23, 2024 01:24 AM
தர்மபுரி, ஆக. 23-
''தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு வங்கிகள் மூலம் இதுவரை, 220 மாணவர்களுக்கு, 14 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் சாந்தி பேசினார்.
தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி அருகே உள்ள தனியார் கல்லுாரியில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசியதாவது:
கல்வி வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படை. தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டில், 1,009 மாணவர்களுக்கு, 23 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 1,568 மாணவர்களுக்கு, 22.44 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஏப்., மாதம் முதல் ஜூன் மாத இறுதி வரை, 121 மாணவர்களுக்கு, 6.23 கோடி ரூபாயும், ஜூலை மாதத்தில், 77 பேருக்கு, 5.11 கோடி ரூபாயும் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், 22 மாணவர்களுக்கு, 2.67 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டதுள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் இதுவரை, 220 மாணவர்களுக்கு, 14 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் பல்வேறு வங்கியாளர்கள், கல்விக்கடன் பெறுவது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.