ADDED : செப் 02, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, நாயக்கன்கொட்டாய் நத்தம் பகுதியை சேர்ந்-தவர் தர்மன், 33; இவர் லாரி பட்டறையில் பெயின்டராக பணி-யாற்றி வந்தார். அவருக்கு, மனைவி மற்றும், 2 ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 21 அன்று வேலைக்கு சென்ற தர்மன் மாயமானார்.
அவர் மனைவி புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். பாலக்கோடு அடுத்த பாறைகொட்-டையை சேர்ந்த, 16 வயது மாணவி, பாளையம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து
வந்தார். கடந்த, 31 அன்று மாயமானார். அவரது பெற்றோர் புகார் படி, பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.