நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்,:
தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று, இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 8 விவசாயிகள், 6 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,660 முதல், 7,060 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 6 குவிண்டால் பருத்தி, 40,000 ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

