பென்னாகரத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
பென்னாகரத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
ADDED : மார் 22, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம:சட்டசபை
பொதுத்தேர்தலையொட்டி, 100 சதவீத ஓட்டுப்ப-திவு குறித்தான
விழிப்புணர்வு துண்டு பிரசுரம், பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்த
பொதுமக்களுக்கு, தேர்தல் நடத்தும் அலு-வலர்கள் நேற்று வழங்கினர்.
பென்னாகரம்
தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு தலை-மையில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன்,
தாசில்தார் ஆறுமுகம், தேர்தல் நடத்தும் துணை அலுவலர் சண்முகசுந்தரம்,
பென்னா-கரம் இன்ஸ்பெக்டர் பாபுசுரேஷ்குமார் ஆகியோர்,
பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம்,
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, 'வாக்கு உன் கடமை, என் வாக்கு
விற்பனைக்கு அல்ல, நேர்மையாக வாக்களிப்போம் என்ற வாசகங்கள் அடங்-கிய
துண்டறிக்கைகளை வழங்கினர்.
இந்த நிகழ்வில் போலீசார் மற்றும் வருவாய்
துறையினர் கலந்து கொண்டனர்.
