sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மொரப்பூர் அருகே சோகம் மின்னல் தாக்கி 2 பேர் பலி

/

மொரப்பூர் அருகே சோகம் மின்னல் தாக்கி 2 பேர் பலி

மொரப்பூர் அருகே சோகம் மின்னல் தாக்கி 2 பேர் பலி

மொரப்பூர் அருகே சோகம் மின்னல் தாக்கி 2 பேர் பலி


ADDED : மே 15, 2024 12:50 AM

Google News

ADDED : மே 15, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்:மொரப்பூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் உட்பட இருவர் பலியாகினர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. அப்போது, நைனாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மனைவி சித்ரா, 50, மாலை, 5:35 மணிக்கு பால் கறக்க கறவை மாட்டை பிடித்து சென்றபோது, மின்னல் தாக்கியது. இதில் சித்ராவும், மாடும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதேபோல், மொரப்பூர் அடுத்த நவலையைச் சேர்ந்தவர் முனியப்பன், 42. இவர், திருப்பத்துார் ரயில்வே பாதுகாப்பு படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரது வீடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

நேற்று மாலை, 5:45 மணிக்கு மழைத்துாரல் வந்ததால், வீட்டின் மீது ஏறி தார்ப்பாய் கொண்டு மூடியுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியதில் பலியானார்.

சம்பவங்கள் குறித்தும், மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us