/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி
/
மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி
மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி
மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி
ADDED : மே 15, 2024 02:29 AM
மொரப்பூர்,:மொரப்பூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் உட்பட, 2 பேர் பலியாகினர்.
தர்மபுரி
மாவட் டம், மொரப்பூர் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை இடி,
மின்னலுடன் சாரல் மழை பெய்தது. அப்போது, நைனாகவுண்டம்பட்டியை
சேர்ந்த மனோகரன் என்பவரின் மனைவி சித்ரா, 50, மாலை, 5:35 மணிக்கு பால்
கறக்க கறவை மாட்டை பிடித்து சென்றபோது, மின்னல் தாக்கியது. இதில்
சித்ராவும், மாடும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அதேபோல்,
மொரப்பூர் அடுத்த நவலையை சேர்ந்தவர் முனியப்பன், 42; இவர்,
திருப்பத்துார் ரயில்வே பாதுகாப்பு படையில் போலீசாக பணிபுரிந்து
வந்தார். இவரது வீடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது.நேற்று மாலை,
5:45 மணிக்கு மழைத்துாரல் வந்ததால், வீட்டின் மீது ஏறி தார்ப்பாய்
கொண்டு மூடியுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியதில் பலியானார்.
இரு சம்பவங்கள் குறித்தும், மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

