ADDED : மார் 01, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அருகே, பிடமனேரி நெல்லிநகரை சேர்ந்தவர் சீதாலட்-சுமி, 50. இவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார்.
கடந்த, 26 அன்று சீதாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, சிவராத்திரி பூஜைக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 7 பவுன் நகை மற்றும், 250 கிராம் வெள்ளி திருட்டு போனது தெரியவந்தது. புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.