/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மத்திய பா.ஜ., அரசை கண்டித்து நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய பா.ஜ., அரசை கண்டித்து நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய பா.ஜ., அரசை கண்டித்து நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய பா.ஜ., அரசை கண்டித்து நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 03:27 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, தி.மு.க., செயலாளர்கள் கிழக்கு தடங்கம் சுப்பிரமணி, மேற்கு பழனியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த, 2 தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி என, தமிழக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளை முற்றிலும், மத்-திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசை கண்டித்து நாளை சனிக்கிழமை காலை, 10:00 மணிக்கு தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவ-லகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில், இந்நாள், முன்னாள் எம்.பி., எல்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு-களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.