/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொக்கராப்பட்டியில் சுங்கம் வசூலிக்க கால அவகாசம் நீட்டிப்பு
/
கொக்கராப்பட்டியில் சுங்கம் வசூலிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கொக்கராப்பட்டியில் சுங்கம் வசூலிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கொக்கராப்பட்டியில் சுங்கம் வசூலிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : மே 10, 2024 02:43 AM
அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கராப்பட்டி பஞ்., புழுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமையில் சந்தை நடக்கிறது.
சந்தையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட கடைகளுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்வதற்கான குத்தகை ஏலம் ஆண்டுதோறும் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஏலம் நடத்தப்படும். இந்நிலையில், சந்தையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான கால அவகாசம் கடந்த, மார்ச்., 31ல் நிறைவடைந்தது. 2024 - 25ம் ஆண்டிற்கான குத்தகை ஏலம், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நடத்தப்படவில்லை. இது குறித்து அரூர் பி.டி.ஓ., சரோத்தமனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, ஏற்கனவே ஏலம் எடுத்தவர்களே இரண்டரை மாதத்திற்கு சுங்க கட்டணம் வசூலிப்பார்கள். அவர்களுக்கு, வரும், ஜூன், 15 வரை நீட்டிப்பு செய்து, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் பணம் செலுத்தி விட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டவுடன் ஏலம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.