sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கொக்கராப்பட்டியில் சுங்கம் வசூலிக்க கால அவகாசம் நீட்டிப்பு

/

கொக்கராப்பட்டியில் சுங்கம் வசூலிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கொக்கராப்பட்டியில் சுங்கம் வசூலிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கொக்கராப்பட்டியில் சுங்கம் வசூலிக்க கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : மே 10, 2024 02:43 AM

Google News

ADDED : மே 10, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கராப்பட்டி பஞ்., புழுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமையில் சந்தை நடக்கிறது.

சந்தையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட கடைகளுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்வதற்கான குத்தகை ஏலம் ஆண்டுதோறும் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஏலம் நடத்தப்படும். இந்நிலையில், சந்தையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான கால அவகாசம் கடந்த, மார்ச்., 31ல் நிறைவடைந்தது. 2024 - 25ம் ஆண்டிற்கான குத்தகை ஏலம், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நடத்தப்படவில்லை. இது குறித்து அரூர் பி.டி.ஓ., சரோத்தமனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, ஏற்கனவே ஏலம் எடுத்தவர்களே இரண்டரை மாதத்திற்கு சுங்க கட்டணம் வசூலிப்பார்கள். அவர்களுக்கு, வரும், ஜூன், 15 வரை நீட்டிப்பு செய்து, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் பணம் செலுத்தி விட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டவுடன் ஏலம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us