/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
/
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஆக 06, 2024 02:22 AM
பாப்பிரெட்டிப்பட்டி,
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மெனசி ஊராட்சிக்கு உட்பட்ட விழுதிப்பட்டி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ., கோவிந்தசாமியிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். இதையடுத்து அவர், பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விழுதிப்பட்டிக்கு சென்று, ஆய்வு நடத்தி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மெனசியில் நடந்து வரும் பேவர் பிளாக் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, நிர்வாகிகள் பெரியகண்ணு, சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.