ADDED : ஆக 04, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம், காரிமங்கலம் அடுத்த, கவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் திலகவதி, 44; இவர் மாட்லாம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
கடந்த, 1 அன்று பணி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவிலிருந்த, 4.5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.