/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குப்பை கிடங்காக மாறிய கோணான் ஏரி துார்வார விவசாயிகள் வேண்டுகோள்
/
குப்பை கிடங்காக மாறிய கோணான் ஏரி துார்வார விவசாயிகள் வேண்டுகோள்
குப்பை கிடங்காக மாறிய கோணான் ஏரி துார்வார விவசாயிகள் வேண்டுகோள்
குப்பை கிடங்காக மாறிய கோணான் ஏரி துார்வார விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஏப் 26, 2024 03:45 AM
மொரப்பூர்: மொரப்பூர் கோணான் ஏரியில், குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், அதை துார்வார நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி
உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில், கோணான் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்புவதன் மூலம், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில், ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து வாய்க்கால்கள் முறையாக துார்வாரப்படாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும், சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், அருகிலுள்ள விவசாய கிணறுகள் வறண்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொரப்பூர் பஞ்.,ல், தினமும், சேகரிக்கப்படும் குப்பை மற்றும் இறைச்சி கடைகளிலிருந்து கொண்டு வரப்படும் கோழி இறக்கைகள் உள்ளிட்ட கழிவுகள் ஏரியில் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதால், மாசடைந்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, ஏரியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

