ADDED : ஆக 02, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரியில், நேற்று காலை முதல் மதியம் வரை பலத்த காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
மாலை, 5:00 மணிக்கு மேல் லேசான காற்றுடன் சாரல் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து, 30 நிமிடத்துக்கும் மேலாக தொடர்ந்த சாரல் மழையால் சாலையில் சிறிது தண்ணீர் தேங்கியது.
* அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று மதியம், 3:00 முதல், மாலை வரை சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.