/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேனீக்கள் விரட்டி கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
/
தேனீக்கள் விரட்டி கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
தேனீக்கள் விரட்டி கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
தேனீக்கள் விரட்டி கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ADDED : செப் 18, 2024 01:42 AM
தேனீக்கள் விரட்டி கொட்டியதில்
20க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
போச்சம்பள்ளி, செப். 18-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் மேல்வீதி, கோட்டைத்தெரு பகுதியிலுள்ள புளிய மரத்தில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. நேற்று காலை, 10:00 மணிக்கு சிலர், தேன் கூட்டின் மீது கல் எரிந்துள்ளனர்.
இதனால், கூட்டிலிருந்து கலைந்த தேனீக்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், வீட்டின் முன் நின்றிருந்த முதியோர் என, 20க்கும் மேற்பட்டோரை விரட்டி, விரட்டி கொட்டின. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்துார் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்துார் போலீசார்
விசாரிக்கின்றனர்.

