sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சந்தனுார் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா

/

சந்தனுார் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா

சந்தனுார் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா

சந்தனுார் பால முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்ட விழா


ADDED : மார் 25, 2024 07:13 AM

Google News

ADDED : மார் 25, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரி அடுத்த, சந்தனுார் பால முருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது.

தர்மபுரி, சந்தனுாரில் உள்ள பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த, 22 ல் கொடியேற்று விழா நடந்தது. நேற்று முன்தினம், திரளான பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், மொடக்கோரி, சந்தனுார், குளியனுார், தா.குளியனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் பால் குடம் எடுத்தனர். பின், ஊர்வலமாக கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று இக்கோவிலில் உற்சவர் தேர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இதேபோல், தர்மபுரி அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று மஹாரதம் இழுக்கும் தேர் திருவிழா நடந்தது. மேலும், நல்லம்பள்ளி அடுத்த லளிகம் சுப்பிரமணி சுவாமி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களில் நேற்று, பங்குனி உத்திரத்தையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us