/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆனி மாத அமாவாசை கோவில்களில் பூஜை
/
ஆனி மாத அமாவாசை கோவில்களில் பூஜை
ADDED : ஜூலை 06, 2024 08:21 AM
தர்மபுரி: தர்மபுரி, எஸ்.வி., சாலையில் உள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி மாத அமாவாசை நாளான நேற்று, ஆஞ்சநேயருக்கு பால், நெய், இளநீர், பழங்கள், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி வனப்பகுதியில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன. தொப்பூர் கணவாய் பகுதி, மன்றோ குளக்கரை ஜெய வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும், ஆனி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தன. ஆனி மாத அமாவாசையில், முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர், தொப்பூர் ஜெய வீர ஆஞ்சநேயர், தர்மபுரி அபய ஆஞ்சநேயர் உட்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.