ADDED : ஆக 15, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடக்கிறது. அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் பெறப்பட்ட, 81 மனுக்களில், 79 மனுக்களின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டன. இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன், டி.எஸ்.பி., ராஜேஷ், தேவராஜன், சுவாதி மற்றும் இன்ஸ்பெக்டர்கள்,
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.