/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துறை சார்ந்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
/
துறை சார்ந்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : மே 04, 2024 07:16 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், துறை சார்ந்த பணிகள் குறித்து அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பட்டா மாறுதல் கோப்புகள் நிலுவை, சான்றிதழ் நிலுவை, அனுமதியின்றி இயங்கி வரும் செங்கல் சூளைகளுக்கு அனுமதி பெற அறிவிப்பு வழங்குதல், வெடிமருந்து, பட்டாசு கடைகள், குவாரிகள் விதிகளுக்கு உட்பட்டு இயங்குவது, பி.எம்., கிசான் மனுக்கள் மீது பரிந்துரை மேற்கொள்வது, வேளாண்மை புள்ளி விவரங்கள் குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் ஞானபாரதி, துணை தாசில்தார்
சக்திவேல், தலைமை நிள அளவர் ஜெயசீல்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.