sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உபரிநீர் திறப்பு சற்று அதிகரிப்பு

/

கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உபரிநீர் திறப்பு சற்று அதிகரிப்பு

கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உபரிநீர் திறப்பு சற்று அதிகரிப்பு

கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உபரிநீர் திறப்பு சற்று அதிகரிப்பு


ADDED : ஆக 09, 2024 03:45 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டு தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் கடந்த ஜூலை, 3ல், 39.65 அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, 30ல் நிரம்பியது. இந்நிலையில் பருவமழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்-தினம் வினாடிக்கு, 7,359 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 6,471 கனஅடியாக சரிந்தது.

அதேபோல் வினாடிக்கு, 13,734 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து நேற்று, 12,806 கனஅடியாக சரிந்தது. இரு அணைகளில் நேற்று முன்தினம் வினாடிக்கு, 8,000 கனஅடி-யாக இருந்த உபரிநீர் திறப்பு நேற்று, 10,000 கனஅடியாக சற்று அதிகரிக்கப்பட்டது.

நீர்திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்ததால் ஒரு வாரத்துக்கு பின் நேற்று முன்தினம், 16 கண் மதகு மூடப்பட்டது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, 10,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு நேற்று காலை, 9:00 மணிக்கு, 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us