ADDED : பிப் 24, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி,: தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம், கனிமவளத்துறை ஆர்.ஐ., அருணகிரியுடன் இணைந்து, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடகத்துாரிலிருந்து, பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து கொண்டிருந்த பதிவெண் இல்லாத, டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. டிரைவர் தப்பி சென்ற நிலையில், டிராக்டரை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்ப-டைத்தனர். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.