sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊதியம் இல்லை கிராமிய கலைஞர்கள் கலெக்டரிடம் மனு

/

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊதியம் இல்லை கிராமிய கலைஞர்கள் கலெக்டரிடம் மனு

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊதியம் இல்லை கிராமிய கலைஞர்கள் கலெக்டரிடம் மனு

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊதியம் இல்லை கிராமிய கலைஞர்கள் கலெக்டரிடம் மனு


ADDED : ஆக 06, 2024 02:23 AM

Google News

ADDED : ஆக 06, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்திய, கிராமிய கலைஞர்களுக்கு, 2 ஆண்டுகளாக பணம் தாராமல் காலதாமதம் செய்வதாக, கிராமிய கலைக்குழுவினர் கலெக்டர் சாந்தியிடம் நேற்று மனு அளித்தனர்.

இது குறித்து, கலைநிலா கிராமிய கலைக்குழுவை சேர்ந்த சாக்கன் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பாரதி கிராமிய கலைக்குழு, கலை நிலா, விடியல், பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையம் மற்றும் குறிஞ்சி என, 5 கிராமிய கலை குழுக்கள் உள்ளன. இதில், தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், அரூர், மொரப்பூர், கடத்துார், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய, 10 ஒன்றியங்களில், 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கத்தின் நோக்கம் குறித்த தகவல்களை மாவட்டத்திலுள்ள, 251 பஞ்., களில் கிராமிய கலைக்குழு மூலம், சுகாதாரம், கழிவு மேலாண்மை, நெகிழி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கூறினர்.

அதன்படி, 2022 மற்றும் 2023 ஆகிய, 2 ஆண்டுகள், தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்.,களில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தினோம். இதில், ஒரு பஞ்.,ல் நடக்கும் நிகழ்ச்சிக்கு, 6,200 ரூபாய் வீதம், மதிப்பூதியம் எங்களுக்கு நிர்ணயிக்கபட்டது. 2 ஆண்டுகள் நடத்திய நிகழ்ச்சிக்கு, 31.12 லட்சம் ரூபாய் வழங்க வேண்டிய நிலையில், 1.79 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கினர். இதில், 29.33 லட்சம் ரூபாய், 2 ஆண்களாக தொடர்ந்து, பல முறையிட்டும் கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதை தொழிலாக நம்பி உள்ள, 5 கலைக் குழுவை சேர்ந்த, 50 குடும்பங்கள் தவித்து வருகின்றன. எனவே, அரசின் திட்டங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்திய எங்கள் கலைக்குழுவினருக்கு பஞ்., நிர்வாகங்கள் மூலம், மதிப்பூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us