sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்

/

வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்

வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்

வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பெண்கள்


ADDED : மே 26, 2024 07:41 AM

Google News

ADDED : மே 26, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் :அரூர் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி, பெண்கள் மனுக்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குமாரம்பட்டியில், 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், கடந்த வாரம் அங்குள்ள நிலத்திற்கு வீட்டுமனை வழங்கக்கோரி கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வருவாய் துறையினரிடம், இது அரசு புறம்போக்கு இடம். எங்களுக்கு இந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறினர். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு, குமாரம்பட்டியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி, மனுக்களுடன் அரூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடமிருந்து அரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன் மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, 11:40 மணிக்கு பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us