sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு

/

கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு

கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு

கிருத்திகையையொட்டி முருகன் கோவிலில் வழிபாடு


ADDED : ஜூன் 06, 2024 04:06 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அடுத்த சந்தனுாரிலுள்ள பாலமுருகன் கோவிலில், கிருத்திகையையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

தர்மபுரி சந்தனுார் பாலமுருகன் கோவிலில், வைகாசி மாத கிருத்திகையையொட்டி, இக்கோவில் மூலவர் சுவாமிக்கு நேற்று பால், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உற்சவர் பஞ்சலோக முருகர், வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், குளியனுார் முருகன் கோவில், அன்னசாகரம் கோடிவிநாயகர் முருகன் கோவில், நெசவாளர் காலனி சிவசக்தி முருகன் கோவில், எஸ்.வி.,ரோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோவில்களில், வைகாசி கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us