ADDED : மார் 21, 2025 01:14 AM
அ நிறம் | அளவு
16 வயது சிறுமி கர்ப்பம்வாலிபர் மீது 'போக்சோ'
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெரியப்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 20. இவர், 16 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து கடந்த ஜன., 20ல் பெரியப்பட்டி பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த, 11ல் சிறுமிக்கு கரு கலைந்துள்ளது. தொடர்ந்து வயிற்கு வலி ஏற்பட்டதால், அரூர் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் பிரபு மீது, போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
