sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

/

2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்


ADDED : ஏப் 30, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பிரதான குழாயில் பராமரிப்பு பணியால், ஒரு நகராட்சி, 6 பேரூராட்சி, 8 ஒன்றியங்களுக்கு, 2 நாட்கள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நிறுத்தப்படும்.

இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில், 600 மி.மீ., விட்ட வார்ப்பிரும்பு பிரதான குடிநீர் குழாயில் பராமரிப்பு பணிகள் மே, 7, 8 ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி நகராட்சி, பென்னாகரம், கடத்துார், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லுார், பி.மல்லாபுரம் ஆகிய பேரூராட்சிகள், ஏரியூர், பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி, கடத்துார், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு, இந்த இரு நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் இந்த இரு நாட்களுக்கு தேவையான, ஒகேனக்கல் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்தவும். மேலும், உள்ளூர் நீராதாரங்கள் மூலம் பெறப்படும் நீரை, இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us