/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கற்கள், மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
/
கற்கள், மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூலை 12, 2025 01:02 AM
கிருஷ்ணகிரி,:ஊத்தங்கரை வி.ஏ.ஓ., தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலை, சென்னப்ப நாயக்கனுார் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. தினேஷ்குமார் புகார்படி, ஊத்தங்கரை போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
மத்துார் வி.ஏ.ஓ., சத்யாவதி மற்றும் அலுவலர்கள் மத்துார் - தர்மபுரி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. சத்யாவதி புகார்படி மத்துார் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.