sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

/

காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

காரில் 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது


ADDED : செப் 26, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி :ஆந்திர மாநிலத்திலிருந்து, கிருஷ்ணகிரி வழியாக காரில், 100 கிலோ கஞ்சா கடத்திய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரைக்கு கிடைத்த ரகசிய தகவல் படி, கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று காலை குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது டாடா சுமோ கார் ஒன்று வந்தது. அதை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர்.

காருக்குள் தலா, 2 கிலோ வீதம் மொத்தம், 50 பொட்டலங்களில், 100 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரிந்தது. அவர்கள் ஆந்திர மாநிலம், கடப்பள்ளியை சேர்ந்த வேணுகோபால், 29, ஹரிகிருஷ்ணா, 26 மற்றும் மதுரை அய்யம்பட்டியை சேர்ந்த வெள்ளைபாண்டி, 46 என தெரிந்தது. அவர்கள் மூவரையும், போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி ரயில் மூலம் ஆந்திராவுக்கு எடுத்து வந்ததும், அங்கிருந்து தமிழகம், கர்நாடகாவுக்கு பிரித்து அனுப்ப முயன்றதும், 100 கிலோவை திருச்சிக்கு கடத்தியபோது சிக்கியதும் விசாரணையில் தெரிந்தது.

மேலும், சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே கேட்பாரற்று கிடந்த, 16 கிலோ கஞ்சா பண்டலையும் போலீசார் கைப்பற்றினர்.






      Dinamalar
      Follow us