ADDED : ஆக 25, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜேந்திரன் நேற்று முன்தினம், ரோந்து சென்ற போது திகிலோடு பகுதியில் மதுவிற்ற முருகன், 60, என்பவரை கைது செய்து, 27 மது பாட்-டில்களை பறிமுதல் செய்தார்.
பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜீவானந்தம் அண்ணாநகர் காலனியில் மதுவிற்ற இளங்-கோவன், 41, கைதுசெய்து, 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்த-குமார் பூமாதம்பட்டியில் மதுவிற்ற சின்னசாமி, 43, கைது செய்து, 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். பாலக்கோடு எஸ்.எஸ்.ஐ., சிங்காரம் முத்துார் கிராமத்தில் மதுவிற்ற பிரசாந்த், 38, கைது செய்து, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.