sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பென்னாகரத்தில் 400 ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு

/

பென்னாகரத்தில் 400 ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு

பென்னாகரத்தில் 400 ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு

பென்னாகரத்தில் 400 ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு


ADDED : ஜன 21, 2025 06:57 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வார சந்தையில், 400 ஆண்டு பழமையான நான்கு நாணயங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரலாற்று சின்னங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. பென்னாகரம்

பகுதியில் கிடைக்கும் வரலாற்றுச் சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியில் பென்னாகரம் வரலாற்று மையம் என்ற அமைப்பை சார்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பென்னாகரம் வாரச்சந்தையில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரலாற்று ஆசிரியர்கள் திருப்பதி, பெருமாள், கணேசன் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து வாரச்-சந்தையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 400 ஆண்-டுகள் பழமையான நான்கு நாணயங்கள்

கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து வரலாற்று ஆசிரியர் திருப்பதி கூறுகையில்; இந்த நாணயங்கள் 1565- - 1799 ஆண்டுகளில் ஆட்சி செய்த மைசூர் உடையர்கள் காலத்திய நாணயங்கள். வாரச்சந்தை என்பதால் வியாபாரத்தில்

இந்த நாணயங்கள் இந்த பகுதியில் பயன்படுத்தப்-பட்டு இருக்கலாம்.இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us