sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல்லில் 43,000 கன அடி நீர்வரத்து 13வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை

/

ஒகேனக்கல்லில் 43,000 கன அடி நீர்வரத்து 13வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லில் 43,000 கன அடி நீர்வரத்து 13வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லில் 43,000 கன அடி நீர்வரத்து 13வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை


ADDED : ஜூலை 09, 2025 02:14 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்,ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை விானடிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 13வது நாளாக அங்கு குளிக்க, பரிசல் இயக்க தடை தொடர்கிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி, அங்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு, 7:00 மணிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர்ந்து, 13வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை போலீசார், மடம் செக்போஸ்டிலேயே திருப்பி அனுப்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us