sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேசிய வேளாண் சந்தை மூலம் 4,429 கிலோ மஞ்சள் ஏலம்

/

தேசிய வேளாண் சந்தை மூலம் 4,429 கிலோ மஞ்சள் ஏலம்

தேசிய வேளாண் சந்தை மூலம் 4,429 கிலோ மஞ்சள் ஏலம்

தேசிய வேளாண் சந்தை மூலம் 4,429 கிலோ மஞ்சள் ஏலம்


ADDED : மார் 05, 2025 08:04 AM

Google News

ADDED : மார் 05, 2025 08:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில், தர்மபுரி விற்பனை குழு செயல்பட்டு வருகிறது. இதில், விவசாயிகளின் விளைபொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு, அதிக விலைக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் தர்மபுரி விற்பனைக்குழு செயலாளர் முன்னிலையில் நடந்த ஏலத்தில், 4,429 கிலோ மஞ்சள் விற்பனையானது.

தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதிவாரம் திங்கட்கிழமை தோறும், மஞ்சள் ஏலம் நடக்கிறது. இந்த ஏல மையத்தில், எவ்வித கமிஷனும் இன்றி, விற்பனை நடப்பதால், விவசாயிகள் ஏலத்தில் கலந்து கலந்து கொள்ளலாம்.

இது குறித்து, விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் கூறுகையில், ''நேற்று முன் தினம் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடந்த, மஞ்சள் ஏலத்தில், அதிகபட்சமாக பனங்காளி மஞ்சள் குவிண்டால், 21,709 ரூபாய், விரலி ரகம், 12,129 ரூபாய், உருண்டை ரகம், 10,469 ரூபாய் என, 18 விவசாயிகள், 117 மூட்டைகளில் கொண்டு வந்திருந்த, 4,429 கிலோ மஞ்சள், 6 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது,'' என்றார்.






      Dinamalar
      Follow us