/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
50 வயது பெண் கூட்டு பலாத்காரம் மேஸ்திரி, கூலித்தொழிலாளி கைது
/
50 வயது பெண் கூட்டு பலாத்காரம் மேஸ்திரி, கூலித்தொழிலாளி கைது
50 வயது பெண் கூட்டு பலாத்காரம் மேஸ்திரி, கூலித்தொழிலாளி கைது
50 வயது பெண் கூட்டு பலாத்காரம் மேஸ்திரி, கூலித்தொழிலாளி கைது
ADDED : ஜூன் 10, 2025 01:30 AM
கெலமங்கலம், கெலமங்கலம் அருகே, பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கட்டட மேஸ்திரி மற்றும் தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே வசிப்பவர், 50 வயது பெண். கணவரை இழந்த இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விபசார தொழில் செய்து வந்தார். இந்நிலையில், தடிக்கல் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தமிழ்ஒளி, 26, கட்டட மேஸ்திரி மனோகரன், 28, ஆகிய இருவரும் கடந்த, 7 இரவு, 9:00 மணிக்கு, அப்பெண்ணை ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு பைக்கில் அழைத்து சென்றனர். அங்கு அப்பெண்ணுடன் சேர்ந்து மது அருந்திய வாலிபர்கள், அப்பெண்ணுடன் தனிமையில் இருந்தனர். அப்போது வாக்குவாதத்தில், அப்பெண்ணின் முகத்தில் பலமாக தாக்கினர்.
நேற்று முன்தினம் காலை அப்பெண் முகம் வீங்கிய நிலையில் இருப்பதை பார்த்த அவரது மகள், நடந்த விபரங்களை கேட்டறிந்தார். தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தாயை அழைத்து சென்றார். அப்பெண் புகார் படி, கூட்டு பலாத்கார வழக்குப்பதிந்த கெலமங்கலம் போலீசார், தமிழ் ஒளி, மனோகரன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.