ADDED : நவ 18, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய, 57-வது தேசிய நுாலக வாரவிழா, மாவட்ட மைய நுாலகத்தில் நேற்று நடந்தது.
இதில், மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். பள்ளி மாண-வர்கள், போட்டி தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்க-டேஷ்வரன் நுால் கண்காட்சியை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த கட்டுரை, கவிதை, பேச்சு போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதில், 3ம் நிலை நுாலகர் அமுதா நன்றி கூறினார்.