sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வனத்துறையினர் விரட்டியும் இடம்பெயராத 60 யானைகள்

/

வனத்துறையினர் விரட்டியும் இடம்பெயராத 60 யானைகள்

வனத்துறையினர் விரட்டியும் இடம்பெயராத 60 யானைகள்

வனத்துறையினர் விரட்டியும் இடம்பெயராத 60 யானைகள்


ADDED : டிச 20, 2024 01:12 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், டிச. 20-

கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 60 க்கும் மேற்பட்ட யானைகளை, நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து, ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டிச் சென்றனர். ஆனால் அவை, அதே வனப்பகுதியில், 3 பிரிவுகளாக பிரிந்து, பாலேகுளி, திம்மசந்திரம் மற்றும் கிரியனப்பள்ளி பகுதிகளில் சுற்றித்திரிந்தன. அவை, அருகே உள்ள கிராமங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தின. அவற்றை நேற்று அதிகாலை, தேன்கனிக்கோட்டை வனச்சரகம், திம்மசந்திரம் வனப்

பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

அதேபோல சானமாவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 'கிரி' என்கிற ஒற்றை யானை டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் நுழைந்து ராகி, சோள பயிர்களை சேதப்படுத்தியது. அதை சானமாவு வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர். யானைகளின் தொடர் படையெடுப்பால், விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us