/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
/
காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
ADDED : நவ 02, 2024 01:10 AM
காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலத்தை சேர்ந்தவர் மாதேஷ்,47; விவசாயி. இவரது மனைவி திவ்யா, 24. ஏழு மாத கர்ப்பமாக இருந்தார். இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அக்., 30ல் தீபாவளி பண்டிகைக்காக திவ்யா, மகேந்திரமங்கலத்துக்கு வந்துள்ளார். அவருக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது. திவ்யாவின் கணவர் மாதேஷ், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பி உள்ளனர். அடுத்தநாள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திவ்யா, சிகிச்சைக்காக பாலக்கோடு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

