sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வனத்தில் மான் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்

/

வனத்தில் மான் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்

வனத்தில் மான் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்

வனத்தில் மான் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்


ADDED : ஏப் 08, 2024 07:19 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த காந்திநகரை சேர்ந்த வேலு என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை மொரப்பூர் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3 கள்ள நாட்டுத்துப்பாக்கிகள், எக்ஸ்லேட்டர் ஒயர், கம்பி வலைகள், 15, வெட்டுக் கத்தி, 2, மான்கொம்பு, 4, கரிமருந்து மற்றும் பை போன்றவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, வனத்துறையினர் வேலுவிடம் நடத்திய விசாரணையில், சந்திராபுரத்தை சேர்ந்த சின்னசாமி, கருத்தம்பட்டி ராஜ்குமார் ஆகியோர், மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை பாக்கெட் செய்து, பழையகொங்கத்தை சேர்ந்த செல்வம், கோவிந்தராஜ், கட்டரசம்பட்டி பாலன், அனுமன்தீர்த்தம் ராசக்கிளி ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் உத்தரவின்படி, வேலு, சின்னசாமி, ராஜ்குமார் ஆகிய, 3 பேருக்கும் தலா, 75,000 வீதம், 2.25 லட்சம் ரூபாயும், செல்வம், கோவிந்தராஜ், பாலன், ராசக்கிளி ஆகிய, 4 பேருக்கு தலா, 10,000 வீதம், 40,000 ரூபாய் என மொத்தம், 2.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us