sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் நாளை பா.ம.க.,வின் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயண பொதுக்கூட்டம்

/

தர்மபுரியில் நாளை பா.ம.க.,வின் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயண பொதுக்கூட்டம்

தர்மபுரியில் நாளை பா.ம.க.,வின் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயண பொதுக்கூட்டம்

தர்மபுரியில் நாளை பா.ம.க.,வின் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயண பொதுக்கூட்டம்


ADDED : நவ 08, 2025 04:00 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில் நாளை நடக்கும், பா.ம.க., உரிமை மீட்பு விழிப்பு-ணர்வு நடை பயண பொதுக்கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தர்மபுரி மேற்கு மாவட்ட செயலரும், தர்மபுரி தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ.,வுமான வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:'உரிமை மீட்க, தலைமுறை காக்க' தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற தலைப்பில், சமூக நீதிக்கான உரிமை, வன்முறை-யில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி மற்றும் நலவாழ்வுக்கான உரிமை, மது, போதை பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, நீடித்தி-ருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை போன்றவை குறித்து, தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டியவை எவை என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில், 100 நாட்க-ளுக்கும் மேலாக நடைபயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்-டத்தில் பங்கேற்று பா.ம.க., தலைவரும், முன்னாள் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான அன்புமணி சிறப்பித்-துள்ளார்.

விழிப்புணர்வு நடைபயண

பொதுக்கூட்டம் இறுதியாக, தர்மபுரி மாவட்டத்தில் நாளை (நவ.,9) தர்மபுரி வள்ளலார் திடலில் மாலை, 4:00 மணிக்கு நடக்-கவுள்ளது. இதில் பா.ம.க., தலைவர் அன்புமணி நிறைவுரையாற்-றுகிறார். பசுமை தாயகம் தலைவர் சவுமியா சிறப்பிக்கிறார். தமி-ழக மக்கள் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அனைத்து நிலை நிர்வா-கிகள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us