/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எச்.ஈச்சம்பாடி ஸ்டாப்பில் விபத்து அபாயம்
/
எச்.ஈச்சம்பாடி ஸ்டாப்பில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 06, 2025 01:25 AM
அரூர், அரூரில் இருந்து, திருப்பத்துார் செல்லும், 4 வழிச்சாலையில், எச்.ஈச்சம்பாடி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு மருதிப்பட்டி, ஊத்தங்கரை மற்றும் அரூர் செல்லும் இடங்களுக்கான பஸ் நிறுத்தம் வெவ்வேறு இடங்களில் இருந்தபோதும், ஒரே இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும், நிழற்கூடம் அமைந்துள்ள இடத்தில், பஸ்களை நிறுத்துவதில்லை. இதனால், பயணிகள் பஸ்சில் ஏறச்செல்லும்போது, விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.