/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தல்
/
நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 09, 2025 03:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அரசு மருத்துவமனையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கர்ப்பிணிக-ளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரி-சோதனைகள், பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உண-வுகள் குறித்து கேட்டறிந்தார். பின், பொது மருத்துவம், பெண்கள், குழந்தைகள் நலப்பிரிவு, விஷ முறிவு சிகிச்சைகள், அதற்கான மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்தார்.
மருத்துவமனை வரும் நோயாளிகளிடம், அக்கறையுடனும், கனிவுடனும் நடந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்-களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து தாளநத்தம் கிராமத்தில் சமு-தாய கூடம், பொது நுாலகத்தை ஆய்வு செய்து, நுால்களின் இருப்பு தேவை போன்றவைகள் குறித்து கேட்டறிந்தார். சமுதா-யக்கூடத்தில் மின்விசிறிகள், குடிநீர் கழிப்பறை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கடத்துார் பி.டி.ஓ., ரவிச்-சந்திரன், டாக்டர் கனல் வேந்தன் உள்ளிட்ட அதிகாரி
கள் கலந்து கொண்டனர்.